வன்முறைகளை நிறுத்த வேண்டும்


இன்றைய செய்தியில் முக்கிய செய்தியாக இடம் பிடித்துள்ள சன் டீவியின் புதிய நேரடி ஒளிபரப்பு உத்தியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கேபில் ஆபரேட்டர் சங்கமும்.
இது தொடகத்தில் கேபில் ஆபரேட்டர்களின் தொழிழை பாதிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று. இருப்பினும் அதனால் புதிய தொழில் நுட்பங்களை தடுக்க முடியுமா? யுகம் யுகமாய் மாறிவரும் சமுதாயம் அதன் தேவைகளையும் மாற்றி வந்துள்ளது.ஆகவே மாற்றம் என்பது ஒன்று தான் மாறாதது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்।தேவையற்ற போரட்டங்களையும் அரசியல் வன்முறைகளையும் நிறுத்த வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். ஒவ்வொரு வன்முறைப் போரட்டங்களின் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்கள் தான் என்பதையும் நினைவுபடுதுகிறேன். மதுரையில் மூன்று இளம் உயிர்கள், ஓசூரில் இரு அப்பவிகள்,தர்மபுரியில் மூன்று கல்லூரி மாணவிகள் என்று சொல்லிக்கொண்டே.......போகலாம். ஆகவே வன்முரையை அனைவரும் கைவிடவேண்டும் ॥ வாழ்க ஜன நாயகம்॥ அமைதியும் அன்பும் கொண்டு அற்புதமாக வாழ அனைரும் முன்வரவேண்டும்.