போதி மரத்து புத்தனும் ஒடி வருவான்...

http://www.youtube.com/watch?v=-XoKZKobBQQ


விழி நீர் மழையில் நான் நனைந்தேன்,,,,,
ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தேன்....
ஆசையில் நான் துடித்தேன் நீ என் மகளாக.....
சத்தியாமாய் உருகியது என் உள்ளம்...
போதி மரத்து புத்தனும் ஒடி வருவான்...
ஆசையில் தேடி வருவான் உன்போல்
ஒருமகள் வேண்டும் என்று....

"மேகம் திரண்டு கண்டு
மின்னல் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்துகொள்ள வா! வா!"

ஒலியில் செவி தொலைத்தேன்.... இன்பத்தேன்...
முகஒளியில் நான் மொத்தமாய் தொலைந்தேன்...

இம்ம்ம்ம்....
என்று நீ உச்சரிக்கும் போது...
கண்மூடி நான் தொலைந்தேன்....
வடுகபட்டி கவிஞனும்...
தன் வார்த்தைகளின் முழு
வலு அறிந்திருப்பான்..
உன் உச்சரிப்பில் கேட்கும் போது...

வீரமறவன் வேலு பிரபாகரனுக்கு வீரவணக்கம்.....


வீரமறவன் வேலு
பிரபாகரனுக்கு
வீரவணக்கம்.....

எம் தமிழர் வழ்வு காக்க
எடுத்தாய் புதுப்பாதை
எத்துனை துயர் வந்தும்
அசையாத நம்பிக்கையுடன்
அசராது உழைத்தாய் !

இருபது நாடுகள் இணைந்து எதிர்த்த போதும்
இம்மியும் கலங்காது எதிர்த்து நின்றாய்...

பணத்தாலும் பதவியாலும் விலைபோன
பதர்காளால் காட்டிக் கொடுக்கப்பட்டாலும்

இருதி மூச்சு உள்ளவரை போராடினாய்...
வீரமறவனாய் !

வீரத்தமிழனே நீ வாழ்கிறாய் ஒவ்வொரு
உண்மைத் தமிழன் நெஞ்சத்திலும்

முருகனுக்கு அடுத்த தமிழ்ச் சாமி நீயடா!

தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்
சாக வரம்பெற்றவனே !

சத்திரியனுக்கு ஏதடா சாவு!
மரணம் ஒரு மலர் படுக்கை தானே
மாவீரனுக்கு..

இனி பிறக்கும் ஒவ்வொரு
தமிழ் குழந்தையும்

உச்சரிக்கும் உன் பெயர்
தமிழ் இனத்தின்
தலைவன் பிரபாகரன்
ஒருவனே என்று...

வீழ்த்த துடிக்கும் அரசியல் சக்திகள்...


திரு வைகோவை சூழ்ச்சி வலைகளால் வீழ்த்த துடிக்கும் அரசியல் சக்திகள்... விழித்துக்கொண்டால்...  அவர் பிழைத்துக்கொள்வார்...

தமிழகத்தின் தற்போதைய அரசியல் வாதிகளில் சற்று மாறுபட்டவர் (THE ODDMAN OUT) திரு.வைகோ   
கொண்டகொள்கையில் உறுதி, வீரம், 
பொதுவாழ்வில் தூய்மை, 
எதிலும் நேர்மை... உழைப்பு.. 
உழைப்பு... உழைப்பு... 
தெளிந்த கருத்து..என இவ்வளவு தகுதிகள் இருந்தும் 
அரசியலில் ஏன் தனிமைப்படுத்தப் படுகிறார்?  
 
இந்த தகுதிகள் தான் கலைஞர், ஜெயா முதலியோருக்கு
அச்சத்தை கொடுக்கின்றன... 
சிறந்த தகுதிகள் உள்ள இவர் அதிக வெற்றி பெற்றால் 
தங்களின் சுயநல அரசியலுக்கு முடிவு நெருங்கிவிடும்...  
இந்த ஒரு காரணத்தால் தான் ஒவ்வொரு தேர்தலிலும்.... 
ஜே மற்றும் கலைஞரால் அதிக சிரமத்திற்கு ஆட்படுத்த படுகிறார்.... 

அதே நேரத்தில் இதனால் பயனடையும் 
ஒரு லக்கிமேன் ராமதாஸ்.... 
வைக்கோ எந்த பக்கம் போனலும் தன் பேச்சலும்  
உழைப்பாலும்  வலு சேர்க்கும் அணியில் கடைசி நேர
கவிழ்ப்பு வேலைகளின் மூலம் நுழைந்து..  
விவசாயின் உழைப்பை திருடும்.. வியாபாரி போல்.. 
மொத்த லாபத்தை அள்ளிக்கொள்ளும்... தந்திரசாலி... 

முன்பு ஆனவத்தின் உச்சியிலும் அதிகார மமதையிலும் 
ஆடாத ஆட்டம் போட்ட ஜெ.க்கு எதிராக ஊர் ஊராக நடைபயணம் செய்து மக்களின் மனதில் ஒரு எழுச்சியையும் மாற்றத்தை வேண்டிய ஆவலையும் தூண்டி "வைகோ" ஒரு மாபெரும் அரசியல் திருப்புமுனையாக 
இருந்த தருனத்தில் தான்..., 
தமிழக சட்டப்பேரவை தேர்தலை சாமர்தியமாக
கலைஞர் தட்டிப்பறித்தார்... 
மூப்பனார்+ரஜினி ஆதரவு என்ற கடைசி நேர அலையினால்..... 
தேர்தலுக்கு ஒருவார அவகாசத்தில் ஒரு திடீர் மாற்றம்.... 
தான் ஏற்படுத்திய "ஜெ"வை வீழ்த்துங்கள்.... கோசமே 
தனக்கெதிராக திருப்பப்பட்டு தனக்கு வரவேண்டிய 
ஆதரவையும் கலைஞருக்கு போக செய்தது,... 

சதிகார அரசியல் சூழலில் ... 
அவருக்கு கிடைத்த இன்றைய தமிழர் எழுச்சி மிக்க 
காலத்தை அவர் சரியான முறையில் 
பயன்படுத்தாமல் கோட்டைவிட்டார்..... 
எது எப்படி இருப்பினும் கடைசி நேரதிலாவது விழித்துக்கொண்டால்... 
அவர் பிழைத்துக்கொள்வார்...

இன்றைய சூழ்நிலையில் திரு வைகோ.. 
அவர்கள் தனித்து ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கவேண்டும்... 
அது தான் "தமிழர் பாதுகாப்பு கூட்டணி" . நிச்சயம் தமிழர்கள், 
தமிழ் உணவார்களின் ஆதரவுடன் நல்ல வரவேற்பை பெறும்... 
இந்த சந்தர்பத்தை வைகோ இழக்க கூடாது.... 

 தமிழ் வாழ்க! தமிழர் வளம் பெறுக!...

மாற்றம் வேண்டும்...மாற்ற வேண்டும்...மாற வேண்டும்...

மக்கள் எண்ணத்தில் மாற்றம் வேண்டும்
ஆளும் கூட்டணியை மாற்ற வேண்டும்
ஈழத்தமிழர் வாழ்வு மாற வேண்டும் ....

மாற்றம் வேண்டும்....மாற்ற வேண்டும்.....மாற வேண்டும்...

மாநிலத்தை ஆளும் தமிழர் விரோதிகளை மாற்ற வேண்டும்


நம் மக்கள் சிந்திக்க வேண்டும்...
நாளைய பொழுது மாற இன்றே சிந்திபோம்!

கட்டணமில்லா அழைப்பு எண்கள்

பல நேரங்களில் சில குறிப்பிட்ட இடங்களுக்குப் போன் செய்ய வேண்டியிருக்கிறது.
விவரம் தெரிந்து கொள்வதற்காக சில நேரங்களில் அவற்றின் எண்களைத் தேடி படாத பாடுபடுவோம்.ஆனால் அவற்றுக்கு இலவசமாகவே தொடர்பு கொள்ளும்
வகையில் (டோல்ஃபிரீ) கட்டணமில்லா அழைப்பு எண்கள்

* இந்தியன் ஏர் லைன்ஸ் - 1800 180 1407

* ஜெட் ஏர்வேஸ் - 1800 225522

* ஸ்பைஸ் ஜெட் - 1800 180 3333

* ஏர் இந்தியா - 1800 22 7722

* கிங் ஃபிஷ்ஷர் - 1800 180 0101

* கனரா பேங்க் - 1800 44 6000

* சிட்டி பேங்க் - 1800 44 2265

* ஸ்டேட் பேங்க் - 1800 44 1955

* ஐசிஐசிஐ பேங்க் - 1800 333 499

* மாருதி- 1800 111515

* டாடா - 1800 225552

* இந்தியன் ரயில்வே - 131

* இந்தியன் ரயில்வே ரிஸர்வேஷன் - 1345, 1335, 1330.
-------------------------------
இந்திய முழுவதும் S T D CODE அறிந்து கொள்ள :-


http://www.bsnl.co.in/stdsearch.phphttp://www.bsnl.co.in/viewstatecode.php



உலகம் முழுவதும் I S D CODE அறிந்து கொள்ள :-



http://www.bsnl.co.in/isdsearch.phphttp://www.bsnl.co.in/viewisdcode.php?ch=A
-------------------------------

இது எப்படி இருக்கு?

நான் பார்த்த படத்தை
நீ பார்க்க வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
நம் மக்கள் ரசிக்க வேண்டும்...

ஒரு இந்திய தமிழனாக....வேண்டுகிறேன்.

இம்மானுட பிறவியில் மனித நேயமற்றுப் போய் இதயத்தின் திசுக்களெல்லாம் இரும்பாலும் பணத்தினாலும் இருகிப்போனோரே!!!

1. சிறிலங்கா அரச பயங்கரவாத தமிழினப் படுகொலையின் கடந்தவார அழிப்புகள் (எச்சரிக்கை: படங்கள் கோரமான காட்சிகளைக் கொண்டவை) - TamilWin.com

http://www.tamilwin.org/view.php?2a26QVP4b33Z9ECe4d46Wn5cb0bf7GU24d2YYpD3e0dBZLuQce03g2hF0cc3tj0Cde

2. என் இனம் அழிக்கப்படுகிறது, எப்படி இதை தடுக்க போகிறோம்????

http://www.youtube.com/watch?v=jbY4KxsrOJw

http://www.youtube.com/watch?v=xqcDGchyaH8


இந்த காட்சிகள் மட்டுமல்ல இணையத்தில்
இன்னும் எவ்வளவோ காட்சிகள் இருக்கிறது...
இறந்து கிடக்கும் வீராங்கணையையும்
புணர்வு கொள்ளும் கொடூர மிருகங்களையும் அதன் அரசும்
அதன் இரக்கமற்ற / மனித தன்மை துளியும் அற்ற செயல்களுக்கு
மூளையும் முதுகெழும்பாகவும் உள்ள காங்கிரஸ்
அதற்கு துணைபோகும் அனைத்து துரோக கும்பழுக்கும்....
தமிழகத்தில் முடிவுரை எழுத வேண்டும் என்று உயிர் ஆயுதம் ஏந்தினான்.

முத்துகுமரன்.....

அவனை தொடர்ந்து 13 ஜீவன்கள் தம் உயிரை துச்சமென தூக்கியெரிந்தன...
ஆம் எரிந்தன....தீயில் எரிந்தன... காய்ந்த சறுகுபோல...

நம்மால் அப்படி எல்லாம் போரடடும் திறம் இல்லை..... ஆயினும்
நாம் வழும் சமகாலத்தில் உலகில் நடக்கும் ஒரு கோர நிகழ்வை..
எப்படி கண்டும் கேட்டும் அறிந்தும் ...
சகித்துகொண்டு நம்மால் வாழமுடியும்..
ஒரு சிரு வருத்தம், ஒரு சிரு பரிவு,
ஒரு துளி கருனை கூட இல்லாமல் போய்விட்டதா?
நம் இதயத்தில்...
அப்படி ஏதெனும் இருந்தால்... சொல்லுங்கள் உங்கள் உறவுகளுக்கு,சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு...
அறிந்தவர்களுக்கு, தெறிந்தவர்களுக்கு....

காங்கிரஸ் புறக்கணிக்க படவேண்டும்....

அது வேரோடும்,,, வேறடிமண்ணோடும்
அகற்றபட வேண்டிய விஷசெடி என்று...

அதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் விரோத
ஓட்டு அரசியல் வியாதிகளுக்கும் ஒரு பாடம் சொல்ல வேண்டும்.


ஒரு மனிதனாக...
ஒரு இந்திய தமிழனாக....
வேண்டுகிறேன்.