தேவதை கவிதைகள்

இனியவனே!!
என்னை தூண்ட உன் ஒரு விரல் தீண்டல் போதுமடா!
ஆனால் நீ உன் எச்சில் முத்தங்களால் என்னை
கொழுந்து விட்டு எரிய செய்துவிட்டாயடா!
என்னை உன்னுடன் விரைவில் இனைத்துக்கொள்!
உன் சுவாசத்தால் வாழும்
உன்னவள்...


என் முதல் தேடல்...

என் முதல் தேடல்...
முதல் முத்தம்
மூச்சின் முதல் ஓட்டம்
கண்களின் முதல் காட்சி
நான் நேசித்த பால்ய சிநேகிதி
பதின்ம வயதின் கனவுகள்
எதுவும் என் நினைவில் இல்லை
இப்போது...
உன் நினைவு மட்டும்...

ஒரு முத்தம்….

உன் ஒரு முத்தம் போதுமடா எனக்கு

நீ வரும் வரை!

நிறைய ஆசைகள் நெஞ்சுக்குள்ளே!!!

நீ நினைக்கலாம்

சராசரி பெண் தானே என்று...

ஆனாலும் சொல்கிறேன் கேள்

உனக்கு பொறுமை இருந்தால்!

ஒரு முழம் பூ நீ சூட்டுவது...

ஒரு கவளம் உணவு நீ ஊட்டுவது...

என் தலை கோதும் உன் விரல்...

உன் கேளி...

உன் புன்னகை...

உன் மடியில் அழுவது...

உன்னை கட்டிக்கொண்டு தூங்குவது...

உன் அணைப்பு...

உன்னுடன் வண்டியில் பயணம்...

உன் தீண்டல்... உன் முத்தம்...

இன்னும் உண்டு....

நான் இழந்து கொண்டிருப்பது...

இருப்பினும்

உன் ஒரு முத்தம் போதுமடா எனக்கு

நீ வரும் வரை!

பிரிவு.....

பிரிவு என்னை பார்த்து சிரித்தது

உன்னவனிடம் இருந்து உன்னை

பிரித்து விட்டேன் என்று...

பாவம் அதற்கு தெரியாது

இந்தப் பிரிவு...

நம் காதலை...

பாசத்தை...

நேசத்தை...

இன்னும் அழப்படுத்துகிறது என்று...

இப்போது நான் சிரிக்கிறேன்

பிரிவைப் பார்த்து....

அவசரம்...

இன்னுமொரு முத்தம்

அழுத்தமா...

சத்தமா...

ஆழமா...

சூடா...

கொடுத்திருக்கலாம்!

என்ன அவசரமோ உனக்கு

தொலைபேசியை துண்டித்துவிட்டாய்...

வாரத்தில் ஒரு நாள் தான் பேசுகிறோம்

என் நிலை பற்றி கொஞ்சூண்டு

யோசிக்கலாமே செல்லம்!

அம்மு நான் காத்திருக்கிறேன்...

உனக்காக....