வீரமறவன் வேலு
பிரபாகரனுக்கு
வீரவணக்கம்.....
எம் தமிழர் வழ்வு காக்க
எடுத்தாய் புதுப்பாதை
எத்துனை துயர் வந்தும்
அசையாத நம்பிக்கையுடன்
அசராது உழைத்தாய் !
இருபது நாடுகள் இணைந்து எதிர்த்த போதும்
இம்மியும் கலங்காது எதிர்த்து நின்றாய்...
பணத்தாலும் பதவியாலும் விலைபோன
பதர்காளால் காட்டிக் கொடுக்கப்பட்டாலும்
இருதி மூச்சு உள்ளவரை போராடினாய்...
வீரமறவனாய் !
வீரத்தமிழனே நீ வாழ்கிறாய் ஒவ்வொரு
உண்மைத் தமிழன் நெஞ்சத்திலும்
முருகனுக்கு அடுத்த தமிழ்ச் சாமி நீயடா!
தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்
சாக வரம்பெற்றவனே !
சத்திரியனுக்கு ஏதடா சாவு!
மரணம் ஒரு மலர் படுக்கை தானே
மாவீரனுக்கு..
இனி பிறக்கும் ஒவ்வொரு
தமிழ் குழந்தையும்
உச்சரிக்கும் உன் பெயர்
தமிழ் இனத்தின்
தலைவன் பிரபாகரன்
ஒருவனே என்று...