சங்கவை? அங்கவை?சங்கரின் தவறா?

சமீபத்தில் முதல்வன் படம் பார்த்தேன். ஏற்கனவே பல முறை பார்த்து ரசித்திருந்தாலும் இப்போதும் ரசிக்க முடிந்தது. சங்கரின் இயக்கம் என்றாலே அதிக பொருட்செலவும் அதன் பிரமாண்டமும் தான் என்பது சிலரின் கருத்து.

அதையும் தாண்டி

" நீங்க டீவி பார்ப்பதில்லையா?
நான் விவசாயம் பார்க்கிறேன்."

"சாதி இல்லாத சமுதாயம் அமைப்போம் என்கிறீர்கள்?
ஆனால் அந்த சாதிக் கலவரத்தை ஊக்குவிப்பதே நீங்கள் தானே?"

நம்ம ஊருல குடிசைகளே இருக்க கூடாதுனு நினக்கிறேன்.
அதே நினைப்புல தான் நம்ம அரசியல்வாதிகள் தீ வைக்கிறார்கள்"

போன்ற ஊசிவெடி வசனங்கள் ஆழமாக மனதில் தைத்தது.
ஒரு மிகசிறந்த ஒருங்கிணைப்பாளர் சங்கர்,இது அவரது தொடர் வெற்றிகளின் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.
தனது சினிமா தொழிலை சிறப்பாக செய்யும் சங்கர் அங்கங்கே சில சமூக அவலங்களை அன்றாட நிகழ்வுகளையும் பத்திரிக்கை செய்திகளையும், சில விழிப்புணர்வு வசனங்களையும், காட்சி அமைவுகளின் மூலம் உணர செய்திருப்பார்.
இருந்தும் "அங்கவை, சங்கவை" பெயரை பயன்படுத்தியதன் மூலம் ஒரு பெரிய சர்ச்சை. அவன் தமிழனே அல்ல ஆரியன்.அதனால் தான் அங்கவை, சங்கவையை கருப்பாக காட்டினான் என்று வலைதளம் வரை ஒலித்தது, அதற்கு காரணம் என்ன? சங்கர் மட்டும் காரணமா? அப்படி என்றால் அதில் நடித்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா தமிழ் விரோதியா? அல்லது இவர்கள் அவரை விட தமிழையும், தமிழ் இலக்கியதையும் அறிந்தவர்களா?இப்பொது உச்சகுரலில் கூச்சலிடுபவர்கள் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுக்கு அங்கவை
அல்லது சங்கவை என்று பெயர் வைத்துள்ளனர்.என்னைப் பொருத்தமட்டில் நான் சங்கருக்கு நன்றி சொல்வேன், "அங்கவை, சங்கவை" பட்டிதொட்டியிலுள்ள பாமர தமிழனும் இன்று அறிய முடிந்தமைக்கும்,எதிர்காலத்தில் பலர் இப்பெயர் சூட்டிக்கொள்ளவும் வாய்ப்புகிடைத்தமைக்கு.

"ஈன்ற பொழுதினும் பெறிதுவக்கும்" -கமலஹாசன்

"Kamal, the proud father of Shruthi, kissed her as a token of his blessings and love."

வலைப்பதிவில் "கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்..." படித்தபோது ஏதோ ஒரு அதிர்வு... ஏன் இவருக்கு இப்படி தோன்றியது...இவர்மட்டு மல்ல இன்னும் தினமும் கருத்து கந்தசாமியாக பதிவு போடும் சிலருக்கும் அப்படிதான் தோனுதாம்... இன்னும் ஒருபடி மேலே சிலர் உடைதான் தவறாகத் தோன்றவைக்கிறது.... காரணங்கள் ஆயிரம் சொன்னாலும்.....ஏன் காமம் தவிர்த்த தழுவலை, முத்தத்தை உலகில் இல்லை என்றே சத்தியம் செய்வார்கள் போலும்... தன் பிள்ளை பல குழந்தைகளுக்கு தாயான பின்னும் தாய் தந்தையர் வீட்டிற்கு வரும் போது பேருந்து நிலையத்திற்கே சென்று காத்திருந்து , வந்தவுடன் வாரியணைத்து முத்தமிட்டு என்னடா இப்படி இளைச்சுப் போயிட்ட போன தடவ வந்த போது நல்லாயிருந்தயே... என்று உருகும் பெரியவகர்ளை தமிழகத்தின் அத்தனை ஊர்களிலும் காணலாம்... இக்காட்சியை காணும் பாமரமக்கள் தாமும் இந்த பாசதிற்கு ஏங்குமே அன்றி அவர்களது மணம் வேறுபார்வை கொண்டது இல்லை...

அப்படி இருக்க
மெத்தப் படித்தவர்கள் மேல் நாட்டை அறிந்தவர்களுக்கு.. அது தந்தையும் மகளும் தான் என்றும் உறுதிபட உணர்ந்தவர்களுக்கு... மூளை தவறாக யோசிக்க செய்கிறது என்றால் தவறு எங்கே?

நமக்குள் அல்லது நம் மூளை மடிப்புகளுக்குள் (( நன்றி - சுஜாதாவின் தலமைச்செயலகம்)) புதைந்து கிடக்கும் படிமங்கள் செய்யும் விசமங்கள் அன்றி வேறு எதைச் சொல்வது...












பாருங்கள் இந்த முகத்தில் என்ன தெறிகிறது?





மீண்டும் ஆறுமாத குழந்தையான பெண்ணும்...
"ஈன்ற பொழுதினும் பெறிதுவக்கும்" தாயுள்ளம் கொண்ட தந்தையும்...
அவரது ஈரம் கசிந்த விழிகளும்...

பெற்ற பிள்ளைக்கு எத்தனை முத்தம் கொடுத்தோம் என்று எண்ணிக்கை பார்க்க முடியுமா?அல்லது யார் முன்னிலையில் கொடுப்பது கூடாது என்று யோசித்து அல்லது திட்டமிட்டு கொடுக்க முடியுமா?...
இதுவே அவரது பெண்ணாய் இல்லாமல் மகனாய் இருந்தல் அப்போதும் நீங்கள் குறை சொல்வீர்களா?

பாலின வேறுபாடு பாசத்திற்கு இல்லை என்பது என் கருத்து. மற்றும் கமல் என்றும் மற்றவர்களின் மதிபிடலுக்காகவோ.. மற்றவரின் முன் ஒரு மாயையை உருவாக்கவோ என்றும் முயன்றதில்லை. தன் வாழ்க்கையை வாழத்தெறிந்த பகுத்தறிவு உடைய மனிதன்.

பாரதி சத்திய ராஜா

C¯USÚº £õµvµõáõ ÷£a_: B¢vµºPЮ, PßÚhºPЮ, ÷PµÍºPЮ JßøÓ ¦›¢x öPõÒÍ ÷Ásk®... AÁºPÒ ÷£_® ö©õÈPÒ GÀ»õ® uªÈÀ C¸¢x ¤›¢x ö\ßÓøÁ. AÁºPÒ ÁõÌ¢x öPõsi¸US® £s£õk, C[Q¸¢x ÷Áº ÂmhøÁuõß. |õ[PÒ Aø©v PõUQ÷Óõ÷© uµ, ÷PõøÇPÒ AÀ». "Pº|õhP® öPõshõß' GßÖ ö£¯º GkUP AvPU Põ»UöPk ÷uøÁ¨£hõx.

|iPº \z¯µõä ÷£mi: ¯õµõP C¸¢uõ¾® £v»i öPõkUP ÷Ásk®. CÀø»ö¯ßÓõÀ, E»Q¼¸US® ö©õzu ©UPÒ öuõøP°À 10 ÷Põi uªÇß ©mk® ö£õUøP Áõ¯õPÄ®, S¸hÚõPÄ® BQÂkÁõß.

தமிழன் சத்யராஜ்

கடந்த 40 வருடங்களாக மராட்டியத்திலும், மலேசியாவிலும், ஈழத்திலும், இப்போது கர்நாடகத்திலும் தமிழனின் கண்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை இனியும் தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

இதுவரை என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இன்று முதல் என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியானால் தமிழன் மனிதன் இல்லையா என்ற சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.

காந்தி சொன்னார் கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள 600 கோடி பேரும் குருடனாகத்தான் இருப்பார்கள். கடைசியில் உலகில் அத்தனை பேரும் குருடனாகி விடுவார்கள் என்றார். ஆனால் தமிழனுடைய கண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரே என்ற ஆள் பிடுங்கினார். பின்னர் மலேசியாவில் பிடுங்கினார்கள். ஈழத்தில் பிடுங்கினார்கள். இன்று கர்நாடகத்திலும் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே காந்தி சொல்வதை இன்று கடைப்பிடிப்பதாக இருந்தால் உலகில் உள்ள 10 கோடித் தமிழர்களும் குருடனாக இருப்பார்கள். மற்ற 690 கோடி பேரும் பார்வையுடன் திரிவார்கள். ஏற்கனவே தமிழன் சிந்தனைக் குருடனாக, கருத்துக் குருடனாக இருக்கிறான். கண்ணும் போய் விட்டால் தலைமுடி மாதிரிதான் இருக்கும் அவனது வாழ்க்கை.

40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர், தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகத்தில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஒருமுறை குண்டுராவ் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போயிருந்தார். மட்டன், சிக்கன் என அனைத்தும் செய்து போட்டார்கள். எம்.ஜிஆரும் சாப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வைத்த தண்ணீரை மட்டும் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். எனது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனக்கு மட்டும் எதற்கு உங்கள் தண்ணீர் என்று கூறி விட்டார்.

சாய்குமார் என்று ஒரு நடிகர். உனக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் கர்நாடகத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறி விட்டார். அவ்வளவுதான் அவரை உதை உதை என்று உதைத்து ராஜ்குமார் என்று சொல் என்று கூறியுள்ளனர். இதற்குப் பெயர்தான் கன்னட வெறி.

நான் வீரப்பன் செய்த செயல்களை எல்லாம் கேள்விப்பட்டு முன்பு அவன் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆவேசப்பட்டிருக்கிறேன். ஆனால் பல வீரப்பன்களை உருவாக்கும் நிலையை இப்போது உருவாக்கி விடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தமிழகத்திற்கு லாபம் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்திற்கு ஒரு நஷ்டமும் கிடையாது.

சூப்பர் காமெடியன் வாட்டாள்:

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.

நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீ கேன.... ஆகி விடுவாய். வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். அவன்தான் தமிழன். குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறிக் கொண்டுதான் இருப்பார்கள். குனியாதே, நிமிர்ந்து நில்.

தமிழனுக்கு எங்கிருந்தும் தண்ணீர் வரக் கூடாது என்கிறார்கள். பாலாறில் தண்ணீர் இல்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் இல்லை, சேது சமுத்திரத் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

கடவுளுக்காக இனிமேல் வெளியில் போகாதீர்கள். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான். அவனைக் கும்பிடுங்கள். மதுரை வீரனைக் கும்பிடுங்கள், சுடலை மாடனை கும்பிடுங்கள். நமக்கு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம் (ரஜினியை திரும்பிப் பார்த்தபடி), அய்யப்பனும் வேண்டாம்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.